
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இதனால் இப்போட்டியிலும் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை தொடர விரும்பும். அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் நியூசிலாந்து அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி