
நடப்பாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் பத்து நகரங்களில் நடைபெற உள்ள இந்த மிகப்பெரிய தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கனவே இந்த தொடருக்கான 8 அணிகள் நேரடியாக உலகக் கோப்பை தொடருக்காக தகுதி பெற்ற நிலையில், எஞ்சியுள்ள இரண்டு இடங்களுக்கான தகுதிசுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் இந்த உலகக்கோப்பை தொடரினை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவருக்கும் மத்தியிலும் காணப்படுகிறது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டிற்கு பிறகு 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணியானது இம்முறை இந்தியாவில் இந்த தொடர் நடைபெறுவதால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு சச்சினுக்காக இந்திய அணி எவ்வாறு கோப்பையை வென்றதோ அதேபோன்று இம்முறை விராட் கோலிக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.