இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நேற்று உத்தர்காண்ட்-ல் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். விமானத்தில் செல்ல விரும்பாத பந்த், சாலை மார்கமாக பயணிக்க விரும்பியுள்ளார். நேற்று இரவு உத்தரகாண்ட்-ல் இருந்து புறப்பட்ட அவர், இன்று அதிகாலை ரூர்கி நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து உண்டான உடனேயே கார் தீப்பிடித்ததால் அங்கிருந்தோர் ரிஷப் பந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் ரிஷப் பந்துக்கு என்ன நடந்தது என்பது குறித்து உள்ளூர் காவல்துறையினர் முதற்கட்ட தகவலை கொடுத்துள்ளனர்.
அதில், “ரிஷப் பந்த் மெர்சிடெஸ் பென்ஸ் என்ற வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி - ஹரிதுவார் நெடுஞ்சாலை அருகே சென்ற போது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. தீப்பிடிப்பதற்கு முன்பாக சில முறை கார் சாலையிலேயே வேகமாக சுழன்றுள்ளது.