
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நாளை ஜனவரி 3ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில் ஒருசில இந்திய வீரர்கள் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது .
இதில் முதன்மை வீரராக ஷுப்மன் கில் உள்ளார். இந்திய அணிக்காக இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் ஷுப்மன் கில் நாளை தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடுவார் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இஷான் கிஷானுடன் அவர் தொடக்க வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் 31 வயதான ராகுல் திருப்பாதி 76 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1,798 ரன்கள் விளாசி இருக்கிறார். சன்ரைசர்ஸ் அணிக்காக கடந்த சீசனில் ராகுல் திருப்பாதி 413 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரெட் 150 தாண்டி இருக்கிறது. ராகுல் திருப்பாதியை தொடக்க வீரர் அல்லது நடுவரசை என ஹர்திக் பாண்டியா எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.