கௌதம் கம்பீரின் திட்டம் மிக தெளிவாக உள்ளது - ஷுப்மன் கில்!
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன் டி20 போட்டிகளில் எனது செயல்பாடு எனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிறப்பாக அமையவில்லை என இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஜூலை 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேறும் இந்தியா மற்றும் இலங்கை டி20 அணிகள் அறிவிக்கப்பட்டு, தற்சமயம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் இன்று செய்தியாளர் சந்தீப்பில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நாங்கள் இதுவரை இரண்டு பயிற்சி அமர்வுகளை மட்டுமே மேற்கொண்டுள்ளோம். அதிலும் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீருடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.
ஆனால் இரண்டு அமர்வுகளில், அவர் என்னிடம் பேசிய விஷயங்களைப் வைத்து நான் கண்டுபிடித்தது என்னவென்றால், அவரது நோக்கமும் தொடர்பும் மிகவும் தெளிவாக உள்ளது. மேலும் அவர் வீரர்களிடமிருந்து அவர் விரும்புவதைப் போலவும், அவரது தொடர்பு மிகவும் தெளிவாக உள்ளது. அதேசமயம் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன் டி20 போட்டிகளில் எனது செயல்பாடு எனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிறப்பாக அமையவில்லை.
நாங்கள் 30 முதல் 40 டி20 போட்டிகளில் விளையாடும் இந்த சுழற்சியில் முன்னோக்கிச் செல்லும்போது, ஒரு பேட்டராகவும், அணியின் செயல்திறனிலும் சிறந்து விளங்குவதே முக்க்கியமாக இருக்கும் என்று நம்புகிறோம். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஒருவருக்கொருவர் பேட்டிங் செய்வதை மிகவும் ரசிக்கிறோம். கண்டிப்பாக இடது - வலது கூட்டணியாக இருப்பதால், இதுவரை நாங்கள் விளையாடிய அனைத்து டி20 ஆட்டங்களிலும் நல்ல பார்ட்னர்ஷிப்களை பகிர்ந்துள்ளோம்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
வரவிருக்கும் காலத்தில் 10 டெஸ்ட் போட்டிகளை விளையாடுவதால் அதற்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன், குறிப்பாக அவற்றில் ஐந்து ஆஸ்திரேலியாவில். அதன் பிறகு, நாங்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடவுள்ளோம். அது மிகவும் உற்சாகமாக இருக்கும். ஆனால் தற்போது பார்க்கும்போது, நாங்கள் விளையாடவிருக்கும் இந்த ஆறு போட்டிகள் - மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் - டெஸ்ட் போட்டிகளுக்குச் செல்வதற்கு முன் முக்கியமானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now