
IPL 2021: Jaiswal happy after getting Dhoni's signature on his bat (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 47வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்களை எடுத்து.
இமாலய இலக்கை இளம் வீரர்களை கொண்ட ராஜஸ்தான் அணி எட்டிப்பிடிக்காது என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதனை மாற்றி அமைத்தார் யாஷஸ்வி ஜெய்ஷ்வால். ஆட்டத்தின் முதல் பந்து முதலே சிஎஸ்கே பவுலர்களை அவர் மிரட்டினார். 21 பந்துகளை சந்தித்த அவர், 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்களை விளாசினார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியடைந்தது.