ஐபிஎல் 2021: கெய்ல், ராகுல் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிறகு 132 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 63 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களை சேர்த்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. பின்னர் மயாங்க் அகர்வால் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ராகுலுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் கெய்ல் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன் மூலம் 17.4 ஓவர்களிலேயே பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 60 ரன்களையும், கிறிஸ் கெய்ல் 43 ரன்களையும் சேர்த்தனர்.
Win Big, Make Your Cricket Tales Now