
ஐபிஎல் தொடரின் 32வது லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 185 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களையும், முகமது ஷமி 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினார்கள்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஓபனர்கள் கே.எல்.ராகுல் 49 (33) ரன்களும், மயங்க் அகர்வால் 67 (43) ரன்களும் சேர்த்து முதல் விக்கெட்டிற்கு அந்த அணி 120 ரன்கள் எடுத்து சிறப்பான நிலையில் இருந்தது. அடுத்து மார்க்கரம் 26 (20), பூரன் 32 (22) ஆகியோர் ரன்களை சேர்த்ததால், கடைசி ஓவரில் வெற்றி பெற 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.