
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்றுவரும் 35ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததது.
அதன்படி குஜராத் டைட்டன்ஸின் தொடக்க வீரர்களாக வழக்கம்போல் விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் விருத்திமான் சஹா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஷுப்மனுடன் இணைந்த விஜய் சங்கர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் ஷுப்மன் கில் 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 19 ரன்களைச் சேர்த்திருந்த விஜய் சங்கரின் விக்கெட்டை பியூஷ் சாவ்லா கைப்பற்றினார்.