
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் நேற்று குஜராத் அணியிடம் மும்பை 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது. முதலில் விளையாடிய குஜராத் அணியில் ஷுப்மன் கில் சதத்துடன் அதிரடியாக விளையாடி 233 ரன்கள் குவித்தது. மும்பை பந்துவீச்சாளர்களின் செயல்பாடு மிக மிகச் சுமாராக இருந்தது. நேற்றைய போட்டியின் இடையில் காயம் பட்ட இஷான் கிஷான் விளையாட முடியாமல் போக, அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் பேட்டிங்கும் கைக் கொடுக்கவில்லை.
பொதுவாக கடந்த சில ஆண்டுகளாகவே ரோஹித் சர்மாவின் பேட்டி ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாராகவே இருக்கிறது. நேற்றைய போட்டியில் தோற்று ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய மும்பை இந்தியன் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் நீண்ட பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பல முக்கியமான விஷயங்களையும் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “பந்துவீச்சு வரிசையில் நீங்கள் உங்களின் முக்கியமான இரண்டு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களை இழக்கிறீர்கள். அது இரண்டு முக்கியமான ஓட்டைகளை அணியில் உருவாக்குகிறது. அதை முடிந்தவரை சிறப்பாகச் செய்ய முயற்சித்தோம். காயத்தில் இருக்கும் உங்கள் அணியின் தோழர்கள் அதிலிருந்து மீண்டு வருவார்கள் என்று நம்பலாம்.