X close
X close

 நாங்கள் அனைவரும் அவரை மிஸ் பண்ணுவோம் -ரிஷப் பந்த் குறித்து வார்னர்!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் ரிஷப் பந்த் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 17, 2023 • 17:05 PM

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் தொடர் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் மார்ச்31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இதற்கான பயிற்சியிலும் அணிகள் இறங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக வலம் வருபவர் ரிஷப் பந்த். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பந்த், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

Trending


இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பந்த், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட வார்னர் கடந்த 7 வருடங்களாக ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 432 ரன்களை குவித்திருந்தார். ஏற்கனவே டெல்லி அணிக்காக விளையாடியுள்ள வார்னரை மீண்டும் ஏலத்தில் எடுத்திருந்தது டெல்லி அணி நிர்வாகம்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வார்னர்,"ரிஷப் பந்த் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மிகச்சிறந்த கேப்டனாக இருந்தவர். நாங்கள் அனைவரும் அவரை மிஸ் பண்ணுவோம். என்மீது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அணி எப்போதும் எனக்கு சொந்த வீடு போலவே இருந்திருக்கிறது. திறமையான வீரர்களை வழிநடத்த ஆவலாக இருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.


Win Big, Make Your Cricket Tales Now