
ஐபிஎல் 16ஆவது சீசனின் 5ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா 1, இஷான் கிஷன் 10, கேமரூன் கிரீன் 5 ஆகியோர் அடுத்தடுத்து படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவும் 15 அதிரடி காட்டவில்லை.
இதனைத் தொடர்ந்து திலக் வர்மா 84 (46), நேஹல் வதேரா 21 (13), அர்சத் கான் 15 (9) ஆகியோர் அதிரடியாக விளையாடியதால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 171/7 ரன்களை குவித்தது. அதன் பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 82 (49), டூ பிளஸி 73 (43), கிளென் மேக்ஸ்வெல் 12 (3) ஆகியோர் அதிரடியாக செயல்பட்டதால், ஆர்சிபி அணி 16.2 ஓவர்களில் 172/2 ரன்களை குவித்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டி முடிந்தப் பிறகு விராட் கோலி பேட்டிகொடுத்தார். அதில், “இது நம்ப முடியாத வெற்றி. அனைவரும் சிறப்பாக செயல்பட்டோம். நீண்ட காலத்திற்கு பிறகு சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு வந்து வெற்றிபெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றிபெற வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டுதான் களமிறங்கினோம்.