Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2024: ஸ்லோ ஓவர் ரேட்; ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அந்த அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 17, 2024 • 14:54 PM
ஐபிஎல் 2024: ஸ்லோ ஓவர் ரேட்; ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்!
ஐபிஎல் 2024: ஸ்லோ ஓவர் ரேட்; ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்! (Image Source: Google)
Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுனில் நரைனின் அதிரடியான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்களைச் சேர்த்தார்.

அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மன் பாவெல் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இறுதிவரை களத்தில் இருந்த ஜோஸ் பட்லர் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Trending


இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலில் தங்கள் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என பட்டியலின் இரண்டாம் இடத்தில் தொடர்கிறது. இப்போட்டியில் சதமடித்ததுடன் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பந்துவீசியது தெரியவந்தது. இது ஐபிஎல் விதிமுறைப்படி குற்றம் என்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்கொண்டு அந்த அணி மீண்டும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அணியின் கேப்டனுக்கு இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு இரண்டு முறை பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதிற்கான அபராதம் விதிக்கப்பட்டது. அதில் முதல் முறை ரூ.12 லட்சமும், இரண்டாவது முறை ரூ.24 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டது. அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும் இத்தொடரில் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement