பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தையே மாற்றக்கூடியவர்கள் - ஷுப்மன் கில்!
பலர் பெரிய ஹிட்டர்களைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் பந்து வீச்சாளர்கள்தான் எப்போது ஆட்டத்தை வெல்கிறார்கள் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் நிதீஷ் ரெட்டி 31 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 27 ரன்களையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற விரர்கள் சோபிக்க தவறினர். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. டைட்டன்ஸ் தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏற்றமளித்தனர். இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி 49 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஷுப்மன் கில் 61 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 35 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடன் மூன்றாவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய ஷுப்மன் கில், “பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தையே மாற்றக்கூடியவர்கள், குறிப்பாக இந்த வடிவத்தில். பலர் பெரிய ஹிட்டர்களைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் பந்து வீச்சாளர்கள்தான் எப்போது ஆட்டத்தை வெல்கிறார்கள்.
Also Read: Funding To Save Test Cricket
நாங்கள் மைதானம் முழுவதும் ஷாட்களை விளையாட விரும்பினோம், அதுதான் எனக்கும் வாஷிங்டன் சுந்தருக்கும் இடையேயான உரையாடலாக இருந்தது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அவர் சுறுசுறுப்பாக இருந்தார், ஆனால் இம்பாக்ட் வீரர் விதியால், சில நேரங்களில் உங்கள் திட்டங்களை மாற்ற வேண்டும். இன்று அவர் பேட்டிங் செய்த விதம் அருமையாக இருந்தது.நாங்கள் 30-40 ரன்கள் பார்ட்னர்ஷிப் பெற்றவுடன், அது ஆட்டத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now