Advertisement

ஐபிஎல் 2025: சமீர் ரிஸ்வி அதிரடியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Advertisement
ஐபிஎல் 2025: சமீர் ரிஸ்வி அதிரடியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2025: சமீர் ரிஸ்வி அதிரடியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 24, 2025 • 11:28 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 24, 2025 • 11:28 PM

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரியன்ஷ் ஆர்யா 6 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் பிரப்ஷிம்ரனுடன் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

அதன்பின் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களிலும், பிரப்ஷிம்ரன் சிங் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 28 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய நெஹால் வதேரா 16 ரன்களுக்கும், ஷஷாங்க் சிங் 11 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

பின்னர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 53 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஒமர்ஸாயும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், விப்ராஜ் நிகாம் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த கேஎல் ராகுல் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்ளுக்கும், அடுத்து களமிறங்கிய செதிகுல்லா அடல் 2 சிக்ஸர்களுடன் 22 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கருண் நாயர் மற்றும் சமீர் ரிஸ்வி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி சீரான வேகத்தில் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். மேற்கொண்டு இருவரும் 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 44 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்பை தவறவிட்டர். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய சமீர் ரிஸ்வி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

Also Read: LIVE Cricket Score

மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சமீர் ரிஸ்வி 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 58 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் முடித்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement