Advertisement

வைபவ் சூர்யவன்ஷி மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் - ராகுல் டிராவிட்!

டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

Advertisement
வைபவ் சூர்யவன்ஷி மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் - ராகுல் டிராவிட்!
வைபவ் சூர்யவன்ஷி மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் - ராகுல் டிராவிட்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 30, 2025 • 10:47 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 30, 2025 • 10:47 PM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அதற்கு முட்டுக்கட்டை போடுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இப்போட்டியை எவ்வாறு அணுகுவார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “வைபவ் சூர்யவன்ஷியை நாம் என்ன பண்ண முடியும்? அது சவாலானதா இருக்கும்னு நினைக்கிறேன். நான் வந்த இந்த நேர்காணலில் இருந்தே, எனக்கு கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் வைபவ் குறித்து தான் உள்ளது. ஆனால் இது அவருக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. என்னை பொறுத்தவரையில் இது சவாலானாத இருக்கும் என்றாலும், அது  சுவாரஸ்யமாவும் இருக்கும். இது சுவாரஸ்யமா இருக்கும்.

Also Read: LIVE Cricket Score

அதன் காரணமாக நாம் தற்போது அவர் மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் என்று தோன்றுகிறது. நான் முன்பு சொன்னது போலவும், பதிலளித்தது போலவும், ஒருவேளை அவரைச் சுற்றி ஒரு ஆதரவு அமைப்பை ஏற்படுத்தி, அதை அவரால் முடிந்தவரை சிறப்பாக வழிநடத்த உதவ முயற்சிப்பது ஒரு கேள்வியாக இருக்கலாம். ஏனென்றால் இங்கே நான் கேள்விப்பட்டதெல்லாம் வைபவ் பற்றிய கேள்விகள் மட்டும் தான்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement