இந்த பிட்ச் வழக்கத்திற்கு மாறான முறையில் மாறிவிட்டது - டேனியல் விட்டோரி!
முந்தைய போட்டியை விட நிலைமைகள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால் நாங்கள் முதலில் பந்து வீச விரும்பினோம் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பயிற்சியாளர் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ச் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பயிற்சியாளர் டேனியல் விட்டோரி, “இந்த மைதானத்தில் டாஸ் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். முந்தைய போட்டியை விட நிலைமைகள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால் நாங்கள் முதலில் பந்து வீச விரும்பினோம். அதாவது, இது 280, 250 விக்கெட் என்று நாங்கள் விவாதித்தோம். ஆனால் இந்த பிட்ச் வழக்கத்திற்கு மாறான முறையில் மாறிவிட்டது.
Also Read
எனவே இங்கு வெற்றிக்கான ஸ்கோர் எது என்பதை முன்கூட்டியே மதிப்பிடுவது கடினம் என்பது தெளிவாகிறது. நீங்கள் இங்கு தொடக்கத்திலேயே பவர் பிளேவை பயன்படுத்த அதிகம் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எங்களால் அதைச் செய்ய முடியவில்லை, மேலும் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தோம். மேலும் பிட்ச் நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை என்பதை உணர்ந்தோம்.
அதனால் நாங்கள் 180 என்ற ஸ்கோரை நோக்கி விளையாட வேண்டியிருந்தது. துரதிர்ஷ்டவசமாக, பவர் பிளேக்குப் பிறகு நீங்கள் 24 விக்கெட்டுக்கு 4 ரன்கள் எடுத்திருக்கும் போது அதைச் செய்வது கடினம். டிராவிஸ் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் ஆரம்பம் முதலே மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறார்கள், அவர்கள் ஆட்டத்தை எடுத்துக்கொள்கிறார்கள், அது எங்களுக்கு நிறைய வெற்றிக்கு வழிவகுத்தது. அவர்கள் வெற்றிபெறவில்லை என்றால், அது மற்ற பேட்ஸ்மேன்களின் பொறுப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் 71 ரன்களையும், அபினவ் மனோகர் 43 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது. மும்பை அணி தரப்பில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரிக்கெல்டன் 11 ரன்னிலும், ஜேக்ஸ் 22 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா 70 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now