
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் இறுதியில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை கைப்பற்றாத அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இம்முறை அக்ஸர் படேல் தலைமையில், தங்களின் முதல் கோப்பையை வெல்லும் முயற்சியில் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக அந்த அணி பல்வேறு மாற்றங்களைச் சேர்த்துள்ளது. அதன்படி அணியின் தலைமை பயிற்சியாளர் உள்பட அனைத்தையும் மாற்றி ஒரு புதிய அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நேற்றைய தினம் அவர் பயிற்சி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்டதுடன் 37 பந்துகளில் தானது சதத்தையும் பூர்த்தி செய்து மிரட்டியுள்ளார்.