பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை வெல்வதே எனது இலக்கு - ஸ்ரேயாஸ் ஐயர்!
பஞ்சாப் கிங்ஸ் இன்னும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை அதனால் அவர்களுக்காக கோப்பையை உயர்த்துவதே எனது குறிக்கோள் என அந்த அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு மூன்றாவது ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். இருப்பினும் இந்த வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே அவரை கேகேஆர் அணி நிர்வாகம் விடுவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதையடுடுத்து ரூ.2 கோடி என்ற அடிப்படை தொகையுடன் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற ஸ்ரேயாஸ் ஐயரை ஏலம் எடுக்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டின.
Trending
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது அவரை ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் தடுமாறி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் தங்களுடையை முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை வெல்லதே என்னுடைய இலக்கு என சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் ஏலத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணத்திலிருந்தே, எனது விருப்பம் தெளிவாக உள்ளது - பஞ்சாப் கிங்ஸ் இன்னும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை அதனால் அவர்களுக்காக கோப்பையை உயர்த்துவதே எனது குறிக்கோள். அது ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும்.
மேலும் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்து அவர்கள் கொண்டாட ஒரு காரணத்தை அளிக்க விரும்புகிறேன். நடப்பு ஐபிஎல் சீசனின் முடிவில் ஒரு பஞ்சாபி கொண்டாட்டம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் போட்டியில் மார்ச் 25ஆம் தேதி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லோக்கி ஃபெர்குசன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்னூர் பண்ணு, குல்தீப் சென், பிரியன்ஸ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே, நேஹால் வதேரா.
Win Big, Make Your Cricket Tales Now