யார் தொடக்க வீரர் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை - பிராட் ஹைடன்!
தங்கள் அணி வீரர்கள் துணிச்சலான கிரிக்கெட்டை விளையாடுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம் என்று பஞ்சாப் கிங்ஸின் துணை பயிற்சியாளர் பிராட் ஹைடன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களுடையே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்கியது. அதன்பின் நடைபெற்று முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்ற ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க பல்வேறு அணிகள் போட்டி போட்ட நிலையில், இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது ரூ. 26.75 கோடிக்கு அவரை வாங்கியதுடன், அணியின் கேப்டனகாவும் நியமித்துள்ளது.
Trending
இந்நிலையில் இத்தொடரில் நாளை நாடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தங்கள் அணி வீரர்கள் துணிச்சலான கிரிக்கெட்டை விளையாடுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம் என்று பஞ்சாப் கிங்ஸின் பயிற்சியாளர் பிராட் ஹைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் இங்கு வந்ததிலிருந்து எங்கள் முக்கிய கவனம் எங்கள் வீரர்களை சீசனுக்கு தயார்படுத்துவதாகும். தர்மசாலாவில் எங்களுக்கு ஒரு நல்ல முகாம் இருந்தது, அங்கு எங்கள் இந்திய வீரர்களை நிறைய அறிந்துகொள்ள முடிந்தது, மேலும் எங்களிடம் உள்ள திறமையைப் பற்றி நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். அவர்கள் சிறப்பான உடற்தகுதியுடன் இருப்பதால், அணியில் உள்ள அனைவரும் ஒரு துணிச்சலான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
அதேசமயம் எங்கள் அணியில் யார் தொடக்க ஆட்டக்காரர்கள் என்பது எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. கடந்த காலங்களிலும் சிறப்பாகச் செயல்பட்ட மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் போன்ற வீரர்கள் எங்களிடம் உள்ளனர். எனவே சரியான கூட்டணியைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். இத்தொடரில் எங்கள் அணி வீரர்கள் அவர்கள் துணிச்சலான கிரிக்கெட்டை விளையாடுவதையும்,
சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதையும் நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். ஏனெனில் இது இது ஒரு புதிய குழு. எங்களுக்குத் தேவையான ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாடத் தகவமைத்துக் கொள்ளக்கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர். மேற்கொண்டு எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் இடம்பிடித்துள்ளனர் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லோக்கி ஃபெர்குசன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்னூர் பண்ணு, குல்தீப் சென், பிரியன்ஸ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே, நேஹால் வதேரா.
Win Big, Make Your Cricket Tales Now