Advertisement

பஞ்சாப் கிங்ஸின் இலக்கு கோப்பையை வெல்வது தான் - ரிக்கி பாண்டிங்!

ஐபிஎல் தொடருக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி முழுமையாக தயாராகி உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

Advertisement
பஞ்சாப் கிங்ஸின் இலக்கு கோப்பையை வெல்வது தான் - ரிக்கி பாண்டிங்!
பஞ்சாப் கிங்ஸின் இலக்கு கோப்பையை வெல்வது தான் - ரிக்கி பாண்டிங்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 22, 2025 • 08:28 PM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்று வரும் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதேசமயம் மற்ற அணிகளும் தங்களுடைய போட்டிகளுக்காக தயாராகி வருகின்றனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 22, 2025 • 08:28 PM

முன்னதாக வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களுடையே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்கியது. அதன்பின் நடைபெற்று முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்ற ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க பல்வேறு அணிகள் போட்டி போட்ட நிலையில், இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது ரூ. 26.75 கோடிக்கு அவரை வாங்கியதுடன், அணியின் கேப்டனகாவும் நியமித்துள்ளது. 

Trending

இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அந்தவகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து மார்ச் 25ஆம் தேதி விளையாடவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி முழுமையாக தயாராகி உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “பஞ்சாப் கிங்ஸின் இலக்கு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதாகும். இதுவரை விளையாடிய அணிகளிலேயே இது மிகவும் சிறந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை உருவாக்கப் போகிறோம் என முதல் நாள் பயிற்சியின்போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர்களிடத்தில் கூறினேன். அதுதான் தற்போது நாங்கள் செல்லும் பயணம், ஆனால் இவை அனைத்தும் ஒரே இரவில் நடக்காது. நீங்கள் அதை உருவாக்க வேண்டும்.

வெற்றி என்பது உண்மையில் ஒரு மனப்பான்மை சார்ந்த விஷயம். நாம் விளையாட வருதைப் போலவே, எதிரணியும் விளையாடும், அவர்கள் நம்மை வெல்ல விரும்பினால், அவர்கள் எதையோ பறிப்பது போல் உணர்கிறார்கள் யாரும் என்னிடமிருந்து எதையும் பறிக்கவோ அல்லது என் அணியிலிருந்து எதையும் பறிக்கவோ நான் அனுமதிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லோக்கி ஃபெர்குசன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்னூர் பண்ணு, குல்தீப் சென், பிரியன்ஸ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே, நேஹால் வதேரா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement