
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி தங்களின் முதல் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பிளேயிங் லெவனை தேர்வுசெய்துள்ளார். இந்த அணியில், ஆர்சிபியைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கும், ரன்னர்-அப் பஞ்சாப் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு வீரருக்கும் இடம் அளித்துள்ளார். மேலும் இந்த அணியின் கேப்டன் பதவியை பஞ்சாப் கிங்ஸின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கியுள்ளார்.
மேலும் அவர் தனது அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் சாய் சுதர்ஷனை தேர்வு செய்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 657 ரன்களையும், சாய் சுதர்ஷன் 759 ரன்களையும் குவித்திருந்தனர். இந்த அணியின் மூன்றாம வரிசை வீராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஜோஸ் பட்லரையும், 4ஆம் வரிசையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரையும் தேர்வு செய்யள்ள இர்ஃபான் பதான் அவரை கேப்டனாகவும் நியமித்துள்ளார்.