Advertisement

பும்ராவுக்கான மாற்று வீரராக யாரை தேர்வு செய்ய வேண்டும் - இர்ஃபான் பதான் கருத்து!

பும்ரா விளையாடவில்லை என்றால், ஆகாஷ்தீப்பை விளையாட வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.

Advertisement
பும்ராவுக்கான மாற்று வீரராக யாரை தேர்வு செய்ய வேண்டும் - இர்ஃபான் பதான் கருத்து!
பும்ராவுக்கான மாற்று வீரராக யாரை தேர்வு செய்ய வேண்டும் - இர்ஃபான் பதான் கருத்து! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 01, 2025 • 10:49 PM

ENG vs IND, 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்வி உள்ள நிலையில், அவர் விளையாடாத நிலையில் ஆகாஷ் தீப் நல்ல தேர்வாக இருப்பார் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 01, 2025 • 10:49 PM

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்விகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாகவே ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமை காரணமாக அவர் இத்தொடரின் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அவர் எந்த மூன்று போட்டிகளில் விளையாடுவார் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இதனால் அவர் நாளை நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது தற்போது வரையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஒருவேளை ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில் அவரது இடத்திற்கு ஆகாஷ் தீப் நல்ல தேர்வாக இருப்பார் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், "ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லையென்றால், அவரது இடத்தில் யாரைச் சேர்க்க வேண்டும்? . பயிற்சியில் நான் பார்த்த வரையிலும் ஆகாஷ் தீப் தனது சிறப்பான ஃபார்மில் இருப்பதாகத் தெரிகிறது. அவரது பந்துவீச்சு ஷமியின் பந்துவீச்சை போன்று இருக்கும் என நான் நினைக்கிறேன். ஆகாஷ் தீப்பின் பந்து வீச்சு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு, குறிப்பாக இங்கிலாந்து நிலைமைகளில் தொந்தரவு தரக்கூடும்.

நீங்கள் ஆக்ரோஷமாக இருக்க நினைத்தால் அர்ஷ்தீப் சிங்கை லெவனில் சேர்ப்பது குறித்து யோசிக்கலாம். ஆனால் பும்ரா விளையாடவில்லை என்றால், ஆகாஷ்தீப்பை விளையாட வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். ஆகாஷ் தீப் குறித்து பேசினால், கடந்த 2024ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமான நிலையில் அவர் 7 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement