Advertisement

இந்த போட்டி மிகவும் நெருக்கமான ஆட்டமாக இருந்தது - ரஜத் படிதார்!

பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்த விதமும், பந்து வீச்சாளர்கள் தங்களுடைய தைரியத்தைக் காட்டிய விதமும் மகிழ்ச்சியளிக்கிறது என ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளர்.

Advertisement
இந்த போட்டி மிகவும் நெருக்கமான ஆட்டமாக இருந்தது - ரஜத் படிதார்!
இந்த போட்டி மிகவும் நெருக்கமான ஆட்டமாக இருந்தது - ரஜத் படிதார்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 04, 2025 • 01:02 PM

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 04, 2025 • 01:02 PM

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்தது.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் ஆயூஷ் மாத்ரே 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 94 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 8 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 77 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இந்த வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார், “இது ஒரு இறுக்கமான ஆட்டமாக இருந்தது, ஆனால் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்த விதமும், பந்து வீச்சாளர்கள் தங்களுடைய தைரியத்தைக் காட்டிய விதமும் மகிழ்ச்சியளிக்கிறது. யாஷ் தயாள் அணியின் முக்கிய பந்துவீச்சாளர். மேலும் அவர் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வருவதன் காரணமாக கடைசி ஓவரை அவருக்கு வழங்க வேண்டும் என்ற தெளிவான யோசைனை எங்களுக்கு இருந்தது, 

கடந்த ஆண்டும் அவர் சிறப்பாகச் செயல்பட்டார், அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சுயாஷ் சர்மா மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது, இதுவரை அவர் ஆர்சிபிக்காக நல்ல ஓவர்கள் வீசி வருகிறார். இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை அவருக்கு வழங்கிய முடிவு 50-50 என்றாலும் நான் என் பந்து வீச்சாளரை ஆதரித்தேன், அவர் நன்றாக வந்தார். அதேபோல் ஷெஃபெர்ட் பேட்டிங் செய்த விதம் நிச்சயமாக பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர் அடித்த சிக்ஸர்களி நான் ரசிக்கிறேன்.

Also Read: LIVE Cricket Score

லுங்கி இங்கிடி மிகவும் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர், நிறைய வெள்ளை பந்து கிரிக்கெட்டை விளையாடியுள்ளார், அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. உச்சத்தில் இருப்பது ஒரு நேர்மறையான விஷயம், நாங்கள் தகுதிச் சுற்றுக்கு இலக்கு வைக்கவில்லை, அடுத்து வரும் மூன்று போட்டிகள் மிகவும் முக்கியமானவை, மூன்று போட்டிகளிலும் எங்களால் முடிந்ததைச் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement