
இந்திய கிரிக்கெட் அணி, தற்போது கேப்டன்ஸி சர்ச்சையில் சிக்கி தள்ளாடி வருகிறது. ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி, எந்த வித முன் அறிவிப்புமின்றி நீக்கப்பட்டது தான் சர்ச்சைகளை ஆரம்பித்து வைத்தன. அவருக்கு பதிலாக இனி டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளுக்கு ரோகித் சர்மா, கேப்டனாக செயல்பட உள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகின்றன. ஒரு தரப்பு, இந்தியாவின் மிகச் சிறந்த வீரர் கோலி. அணிக்காக அவர் தலைமை பொறுப்பு வகித்து பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். அப்படி பட்டவர் அவமதிக்கப்பட்டு விட்டார் என்று சொல்லப்படுகிறது. மறுதரப்பில் ரோஹித் கேப்டன்சிக்கு தகுதியனவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ-யின் முடிவுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்திலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.