
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையடி வருகிறது. இதில் இந்திய அணி முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதில் டெல்லியில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னருக்குக் காயம் ஏற்பட்டது. முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வார்னர் விலகினார். சிகிச்சைக்காக உடனடியாகக் குடும்பத்தினருடன் சிட்னிக்குத் திரும்பியுள்ள வார்னர், டெஸ்ட் தொடருக்குப் பிறகு நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியுள்ள வார்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், “2024 வரை நான் விளையாடுவேன் என்று கூறியுள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு இடமில்லை என தேர்வுக்குழுவினர் கருதினால் அப்படியே இருக்கட்டும். வெள்ளைப் பந்து அணிகளில் இடம்பெற முயல்வேன். அடுத்த ஒரு வருடத்தில் ஏராளமான கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.