
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தெல் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். மேற்கொண்டு எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.
முன்னதாக இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ஜேக்கப் பெத்தெல் பேட்டிங்கில் 51 ரன்களையும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். ஆனால் அப்போட்டியின் போது காயமடைந்த அவர் 3 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில் மேற்கொண்டு பந்துவீசவில்லை. அதன்பின் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அவர் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
England Young All Rounder Jacob Bethell has been ruled out of the Champions Trophy!#ENGvIND #ChampionsTrophy pic.twitter.com/UZtqknnHLO
— CRICKETNMORE (@cricketnmore) February 10, 2025