
ENG vs IND, 3rd Test: சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 350 விக்கெட்டுகளை கைப்பற்றிய 9ஆவது வீரர் எனும் சாதனையை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜேமி ஸ்மித் 51 ரன்களுடனும், பிரைடன் கார்ஸ் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 450ஆவது விக்கெட்டை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக இந்த மைல் கல்லை எட்டிய 9ஆவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.