
India Probable Playing XI For 3rd Test: லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பிரஷித் கிருஷ்ணா நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (ஜூலை 10) இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிநடைபெறவுள்ளது. இத்தொடாரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலும் வைத்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் ஜோஷ் டங் நீக்கப்பட்டு கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற விவாதங்கள் தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.