
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்று முடிந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் தனித்துவ சாதனையையும் பும்ரா படைத்தார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் யுஸ்வேந்தி சஹாலை பின்னுக்கு தள்ளி பர்பிள் தொப்பியையும் வென்று அசத்தினார். மேலும் நடப்பு ஐபிஎல் தொட்ரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னர் தான் இந்தியாவைவிட்டு வெளியேறி கனடா செல்ல இருந்ததாக அவரது மனைவி சஞ்சனா கணேசன் நடத்திய சமீபத்திய நேர்காணால் ஒன்றில் பும்ரா தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் சஞ்சானா பும்ராவிடம், நீங்கள் கனடாவுக்குச் சென்று அங்கு புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்புகிறீர்களா?" என்ற கேள்வியை எழுப்பினார்.