
லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இப்போட்டி ஆர்சிபி அணி ஒரு கட்டத்தில் 123 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் மற்றும் ஜித்தேஷ் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்ம 85 ரனகளையும், மயங்க் அகர்வால் 40 ரன்களையும் சேர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்த வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதில் 6வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ஜிதேஷ் 33 பந்துகளில் 257.58 ஸ்ட்ரைக் ரேட்டில் 85 ரன்கள் எடுத்தார், அதில் அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை அடித்தார். மேலும் இது அவரது முதல் ஐபிஎல் அரைசதமாகவும் அமைந்தது. இந்நிலையில் இதன் மூலம் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான ரன் சேஸிங்கில் 6ஆவது இடத்தில் அல்லது அதற்குக் கீழே பேட்டிங் செய்து அதிக ரன்களை சேர்த்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.