
இந்தியவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து உள்ளது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் சாம் கரன் வருகிறார். இதற்கடுத்து ஆல்ரவுண்டர் வோக்ஸ், ஆதில் ரஷீத், மார்க் வுட் ஆகியோர் வருகிறார்கள். இவர்கள் எல்லோருமே பேட்டிங் செய்யக் கூடியவர்கள். இவர்களால் பெரிய ஷாட்கள் விளையாட முடியும்.
இந்தக் காரணத்தினால் இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் மிக வலிமையான அணியாக பெரும்பாலான முன்னாள் வீரர்களால் கிரிக்கெட் விமர்சகர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 என இரண்டிலும் நடப்பு சாம்பியன் ஆக இருந்து வருவது இங்கிலாந்து அணிதான். இங்கிலாந்து அணியில் இந்த புதிய எழுச்சி ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட் வரை சுவாரசியமாக்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக வெளியேறி, இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட்டின் அணுகுமுறை தாக்குதல் பாணிக்கு மாறியது. அங்கிருந்து இப்போது வரை, இங்கிலாந்து பேட்டிங் பவுலிங் என இரண்டு துறைகளிலும் அதிரடியான அணுகுமுறையையே கொண்டிருக்கிறது.