Advertisement

விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; அரையிறுதியில் விதர்பா!

விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹரியானா அணிக்கு எதிரான கலிறுதிச்சுற்று ஆட்டத்தில் விதர்பா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Advertisement
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; அரையிறுதியில் விதர்பா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; அரையிறுதியில் விதர்பா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 12, 2025 • 09:42 PM

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் அபிஜீத் தோமர், மானவ் சுதர் ஆகியோர் தலா 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 12, 2025 • 09:42 PM

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் மஹிபால் லோம்ரோர் 32 ரன்களிலும், தீபக் ஹூடா 45 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷுபம் கர்வால் - கார்திக் சர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். அதன்பின் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களில் கார்வால் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் கார்த்திக் சர்மாவும் ஆட்டமிழந்தனர். 

Also Read

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் தீபக் சஹார் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்களைச் சேர்த்தது. விதர்பா அணி தரப்பில் யாஷ் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய விதர்பா துருவ் ஷோரே மற்றும் யாஷ் ரத்தோட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், யாஷ் ரத்தோட் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து துருவ் ஷோரேவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கருண் நாயரும் அதிரடியாக விளையடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஷோரே 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 118 ரன்களையும், கேப்டன் கருண் நாயர் 13 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 122 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் விதர்பா அணி 43.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக நடைபெற்ற முதல் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் குஜராத் மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 196 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஹரியானா அணி 44.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஹரியானா அணி நடப்பு விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement