Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தங்கள் அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 24, 2024 • 10:07 PM

இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ். உலகின் தலைசிறந்த டி20 வீரர்களில் ஒருவராக இருந்து வரும், அவர் தற்போது ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 2 பேட்ஸ்மேனாகவும் அங்கம் வகித்து வருகிறார். மேற்கொண்டு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 24, 2024 • 10:07 PM

இந்நிலையில் தற்போது சூர்யகுமார் யாதவ் பற்றி மிகப்பெரும் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் ஐபிஎல் 2025 தொடருக்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சூர்யகுமார் யாதவை தங்கள் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான தகவலின் படி சூர்யாவுக்கு கேகேஆர் அணியானது அணியை வழிநடத்தும் முறைசாரா சலுகையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

Trending

மேற்கொண்டு, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் அணிக்கு கோப்பையை வாங்கிக்கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி நிர்வாகம் கழட்டிவிட முற்பட்டு வருவதுடன், சூர்யகுமார் யாதவிற்கு அந்த பொறுப்பை வழங்க முன் வந்துள்ளது. ஆனால் சூர்யகுமார் யாதவ் கேகேஆருக்கு திரும்ப விரும்புகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போது இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பதால் சூர்யகுமாரின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இது தவிர, நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியிலும் ஒரு அங்கமாக இருந்தார் என்பதும் குறுப்பிடத்தக்கது. அதேசமயம் சூர்யகுமார் யாதவ் தனது ஆரம்ப கால ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஒரு அங்கமாக இருந்ததுடன், அணியின் துணைக்கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

 

அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்தபோது, ​​சூர்யகுமார் யாதவ் அந்த அணியின் துணை கேப்டனாக இருந்தார். ஆனால் 2024 சீசனில் ஹர்திக் பாண்டியாவின் வருகையுடன் எல்லாம் மாறியது. முதலில் ரோஹித்துக்குப் பிறகு அடுத்த மும்பை அணியின் கேப்டனாக கருதப்பட்ட சூர்யகுமார் யாதவை அந்த அணி நிர்வாகம் புறக்கணித்ததுடன், தங்கள் அணியின் கேப்டனாகவும் பாண்டியாவை கேப்டனாக்கியது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஆனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது பெரிதளவில் சோபிக்க தவறியதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் முதல் அணியாக இழந்தது. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவை அந்த அணி கேப்டன் பொறுப்பில் தக்கவைக்குமா என்ற கேள்விகளும் உள்ளன. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும் சூர்யகுமார் யாதவை அடுத்த கேப்டனாக நியமிக்க விரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement