Advertisement

இதுபோன்ற வெற்றி எப்போதும் சிறப்பு வாய்ந்தது - கேஎல் ராகுல்!

இப்போட்டியில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் பவர் ஹிட்டராக மட்டும் இல்லாமல் இந்த போட்டியில் அடிக்க வேண்டிய பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அடித்தார் என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 24, 2024 • 14:26 PM
இதுபோன்ற வெற்றி எப்போதும் சிறப்பு வாய்ந்தது  - கேஎல் ராகுல்!
இதுபோன்ற வெற்றி எப்போதும் சிறப்பு வாய்ந்தது - கேஎல் ராகுல்! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சதத்தின் மூலம, ஷிவம் தூபேவின் அதிரடியான அரைசதத்தின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களையும், ஷிவம் தூபே 66 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடியா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் குயின்டன் டி காக், கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டொய்னிஸ் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்ததுடன் 124 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Trending


இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், “இதுபோன்ற போட்டியில் வெற்றிபெறுவது எப்போது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அவர்கள் மிகச்சிறப்பாக விளையாடி எங்களை அழுத்ததிற்கு உள்ளாக்கினர்.  அவர்கள் ரன் ஏதும் எடுக்காமலேயே முதல் விக்கெட்டை இழந்ததும் அதிலிருந்து மீண்டு வந்தது மிகச் சிறப்பாக இருந்தது.

முதலில் நாங்கள் எதிரணியை 170 முதல் 180 ரன்களில் சுருட்டி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 200 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டனர். அதேபோன்று எங்களது அணியில் ஸ்டொய்னிஸ் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார். அவர் பவர் ஹிட்டராக மட்டும் இல்லாமல் இந்த போட்டியில் அடிக்க வேண்டிய பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அடித்தார்.

இந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன் பயமற்ற ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன். அதன் காரணமாகவே பவர்பிளேவில் ஒரு விக்கெட் விழுந்த போதும் அவரை களம் இறக்கினோம். அந்த முடிவு மிகச் சரியான அமைந்துதோடு சேர்த்து எங்களுக்கு வெற்றியையும் தேடித்தந்தது என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement