
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றுபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா இன்று இந்தூரில் நடைபெற்றுவரும் 2ஆவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி ர்ன்களை சேர்த்தார். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்த பின் தடுமாறி வந்த அவர் இந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பி கில்லுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 11 பவுண்டரி 3 சிக்சருடன் சதத்தை விளாசி 105 ரன்கள் குவித்து அவுட்டானார்.
மறுபுறம் ஏற்கனவே நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் தொடர்ந்து அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 6 பவுண்டரி 4 சிக்சருடன் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் கேஎல் ராகுல் கேமரூன் கிரீன் வீசிய 35ஆவது ஓவரின் 3வது பந்தை அதிரடியாக எதிர்கொண்ட முழு பவர் கொடுத்து வேகமாக அடித்தார்.