Advertisement
Advertisement
Advertisement

உலக கோப்பையை இந்திய அணி வென்றது என்றால் அதற்கு இவர்கள் தான் காரணம் - கவுதம் கம்பீர்!

கேஎல் ராகுல் மீண்டும் பார்மிற்கு திரும்பிவிட்டார். இதே ஃபார்ம் தொடர்ந்தால் இந்திய அணி கோப்பையை வெல்லும் கவுதம் கம்பீர் என்று கணித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 05, 2022 • 11:31 AM
KL Rahul is probably going to light up this T20 World Cup, says Gautam Gambhir after India opener re
KL Rahul is probably going to light up this T20 World Cup, says Gautam Gambhir after India opener re (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 4 சூப்பர் 12 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. கிட்டத்திட்ட பாதி காலை அரையிறுதி போட்டிக்குள் வைத்துவிட்டது என்று கூறலாம்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறும் மற்றொரு சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பு உறுதி பெற்று விடும். பேட்டிங்கில் இந்திய அணிக்கு சற்று கவலை அளிக்கும் விதமாக இருந்தது கேஎல் ராகுல் ஃபார்ம். முதல் மூன்று போட்டிகளில் 4, 9 மற்றும் 9 ரன்கள் அடித்தார். ஆனால் இவரது பேட்டிங் மீது ரோகித் சர்மா மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இதன் காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட வைக்கப்பட்டார்.

Trending


அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக அதிரடியாக விளையாடி 51 ரன்கள் அடித்தார். மீண்டும் ஃபார்மிற்கு திரும்பி இருப்பதால் அணி நிர்வாகம் இவர் மீது நம்பிக்கையை பெற்றிருக்கிறது. கேஎல் ராகுல் தனது இதே பார்மை தொடர்ந்தால் இந்திய அணி நிச்சயம் உலக கோப்பையை வெல்லும் என்று தனது கணிப்பில் தெரிவித்து இருக்கிறார் கவுதம் கம்பீர். 

அவர் கூறுகையில், “பயிற்சி ஆட்டத்தின் போது பிரிஸ்பேன் மைதானத்தில கேஎல் ராகுல் அரைசதம் அடித்தபோது இந்த உலக கோப்பையில் அபாரமாக விளையாடுவார் என நினைத்தேன். ஒரு சில போட்டிகளில் தவறு செய்வதால் அவர் மோசமான வீரர் ஆகிவிட முடியாது. அந்த தவறுகள் தான் அவரை சரி செய்து மிகச் சிறந்த வீரராக மாற்றும்.

இந்த கடினமான சூழலில் உங்களை நீங்கள் சரியான மனநிலையில் வைத்திருக்க வேண்டும். போதிய நேரம் எடுத்துக்கொண்டு விளையாடுவது தவறு இல்லை. வங்கதேசத்திற்கு எதிராக பாய்ண்ட் திசையில் கே.எல். ராகுல் சிக்சர் அடித்தபோது, அவர் மீண்டும் பார்மிற்கு திரும்பி விட்டார் என உறுதி செய்து கொண்டேன். இதே ஃபார்ம் இந்த உலகக் கோப்பை முழுவதும் தொடர்ந்தால் நிச்சயம் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியும்.

இந்த உலக கோப்பையை இந்திய அணி வென்றது என்றால், அதற்கு கேஎல் ராகுல், ரோகித் சர்மா, ரிஷப் பந்த் ஆகியோரின் பேட்டிங் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்டர் பங்களிப்பு ஆகியவை மிக முக்கிய காரணமாக அமையும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement