Advertisement

ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸில் இணைந்தார் கேஎல் ராகுல்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்தததுடன், தனது பயிற்சியையும் தொடங்கியுள்ளது.

Advertisement
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸில் இணைந்தார் கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸில் இணைந்தார் கேஎல் ராகுல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 29, 2025 • 08:25 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 29, 2025 • 08:25 PM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் லீக் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேற்கொண்டு இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Trending

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கூடுதல் உத்வேகத்தைப் பெற்றுள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் கேஎல் ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸில் இணைந்துள்ளார். முன்னதாக குழந்தை பிறப்பின் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை தவறவிட்ட ராகுல் தற்சமயம் மீண்டும் அணியில் இணைந்துள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் நாளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் கேஎல் ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில் அவர் தற்சமயம் கடுமையான வலைபயிற்சியிலும் ஈடுபடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் கேஎல் ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்ததையும், பின்னர் வலை பயிற்சியில் ஈடுப்பட்டதையும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி காணொளியாக வெளியிட்டுள்ளது. 

முன்னதாக கடந்த ஐபிஎல் சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல், ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் ஏலத்தில் பங்கேற்ற கேஎல் ராகுலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்ஸர் படேல் (கேப்டன்), ஃபஃப் டு பிளெஸ்சிஸ் (துணைக்கேப்டன்),கேஎல் ராகுல், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement