
KL Rahul, Rashid Khan Could Get Banned from IPL 2022 After Lucknow Approach Duo: Reports (Image Source: Google)
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு தக்கவைக்கப்படும் வீரர்களை தேர்வு செய்வதில் அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இன்று அதற்கான கடைசி தேதியாகும்.
இந்த ஆண்டு ஒரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு அணியில் இருக்கும் வீரர்களும், தங்களுக்கு அந்த அணியில் நீடிக்க விரும்பவில்லை என்றால் வெளியேறிக்கொள்ளலாம்.
அந்தவகையில் இந்தாண்டு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளில் கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் ஆகியோரை தக்கவைக்க நிர்வாகங்கள் முடிவெடுத்தும், அவர்கள் நீடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதற்கு காரணம் புதிதாக வந்துள்ள லக்னோ அணி தான் எனக்கூறப்படுகிறது.