
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி, தற்போது ஜிம்பாப்வேவுக்கு சென்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஷிகர் தவான் இந்த அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில் ஆகிய இருவரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஆகிய இருவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக எடுக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.