
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இந்திய அணி நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளையாடவுள்ளார். இந்நிலையில் குழந்தை பிறப்பின் காரணமாக இத்தொடரின் முதல் சில போட்டிகளை கேஎல் ராகுல் தவறவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ராகுலும் அவரது மனைவி அதியா ஷெட்டியும் ஏப்ரல் மாதம் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில், அந்த நேரத்தில் ராகுல் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தங்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து அதியாவின் தந்தை நடிகர் சுனில் ஷெட்டி, சமீபத்தில் அளித்த பேட்டிய ஒன்றில் "ஏப்ரலில் எங்கள் பேரன் அல்லது பேத்தியை சந்திக்க காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேஎல் ராகுலை விடுவித்தது.