Advertisement

விராட் கோலிக்கு பிசிசிஐ இடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை - முகமது கைஃப்!

தேர்வாளர்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் விராட்டின் ஃபார்மை மேற்கோள் காட்டி, அணியில் அவரது இடம் இனி இருக்காது என்று கூறியிருக்கலாம் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

Advertisement
விராட் கோலிக்கு பிசிசிஐ இடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை - முகமது கைஃப்!
விராட் கோலிக்கு பிசிசிஐ இடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை - முகமது கைஃப்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 14, 2025 • 01:52 PM

இங்கிலாந்து - இந்திய அணிக்களுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வாதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 14, 2025 • 01:52 PM

அதிலும் குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவுள்ள அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்கள் என 9230 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில் விராட் கோலிக்கு பிசிசிஐ மற்றும் தேர்வு குழு வினரிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், “விராட் கோலி இந்த வடிவத்தில் தொடர விரும்பினார் என்று நினைக்கிறேன். பிசிசிஐயுடன் சில உள் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும், தேர்வாளர்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் அவரது ஃபார்மை மேற்கோள் காட்டி, அணியில் அவரது இடம் இனி இருக்காது என்று கூறியிருக்கலாம். என்ன நடந்தது என்பதை நாம் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது, திரைக்குப் பின்னால் உண்மையில் என்ன நடந்தது என்பதை யூகிப்பது மிகவும் கடினம்.

ஆனால் ரஞ்சி கோப்பையில் விளையாடியதால், கடைசி நிமிட முடிவைக் கருத்தில் கொண்டு, அவர் வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் வர விரும்பினார் என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன். கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், அவருக்கு பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களிடமிருந்து கிடைக்கும் என்று அவர் நினைத்த ஆதரவு கிடைக்காமல் போயிருக்கலாம், அது அவருக்குக் கிடைக்காமலும் போயிருக்கலாம்.

மேலும் நடந்து முடிந்த 2024-25 பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் கூட விராட் கோலி ரன்கள் எடுக்க அவசரமாகத் தெரிந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மணிக்கணக்கில் பொறுமையாஅக விளையாட வேண்டும், அவர் கடந்த காலத்தில் இதைச் செய்துள்ளார். ஆனால் சமீப காலங்களில் அவர் டிரைவ் அடிக்க முயற்சி செய்யும் போதெல்லாம் அது எட்ஜாகி ஆட்டமிழக்கும் போதெல்லாம் அவரது பொறுமையைக் கொஞ்சம் குறைத்துவிட்டது என்று எனக்குத் தோன்றியது.

Also Read: LIVE Cricket Score

ஒருவேளை அவர் ‘நான் என் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன், ஒரு அற்புதமான சதம் அடிப்பதில் என்ன பயன்’ என்று கூட நினைத்திருக்கலாம். ஏனெனில் முன்பு அவரிடம் வேறு மாதிரியான பொறுமை இருந்தது, அவர் பந்துகளை விட்டுவிடுவார், தனது நேரத்தை எடுத்துக்கொள்வார், பந்து வீச்சாளர்களை சோர்வடையச் செய்வார், பின்னர் அவர்களை வீழ்த்துவார், ஆனால் ஆஸ்திரேலியாவில் நான் அவரிடம் அதைக் காணவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement