
சமகால கிரிக்கெட் தொடரின் அசைக்க முடியாத ஜாம்பவானாக வலம் வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் 2019 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக சதம் அடித்த விராட் கோலி அதற்குப்பின் இரண்டு வருடங்கள் எந்த ஒரு சதமுமே அடிக்கவில்லை. இவர் சதம் அடித்து 1000 நாளை கடந்து விட்டதால் விராட் கோலி குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வந்தது.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத விராட் கோலி ஆசிய கோப்பை சிறந்த கம்பேக் கொடுத்திருந்தார். பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் போன்ற அணிக்கு எதிராக இரண்டு அரைசதம் அடித்திருந்த விராட் கோலி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்துள்ளார்.