
உலகத்தின் சிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்றால் அது சச்சினா? விராட் கோலியா? என பல காலம் விவாதம் நடைபெற்று வருகிறது. சச்சினின் மகத்தான சாதனையை விராட் கோலி ஒவ்வொன்றாக உடைத்து வருகிறார். இதுவரை கிரிக்கெட் விளையாடுவதில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருக்கிறார். இப்போது விராட் கோலி 75 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி 497 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று மொத்தமாக 25,321 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 130 முறை அரை சதம் கடந்திருக்கிறார். மேலும் உலக அளவில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது ஆறாம் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி இன்னும் ஆறு ஆண்டுகள் விளையாடினால், சச்சின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி விளையாடிய காலம் வேறு? சச்சின் விளையாடிய காலம் வேறு என்றும் அதனை ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றும் பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஷோயப் அக்தர், “விராட் கோலி நான் விளையாடும் காலங்களில் கிரிக்கெட் ஆடி இருந்தால் அவரால் 30 முதல் 50 சதங்களை கூட எட்டியிருக்க முடியாது . தான் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்ததாகவும் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக ரன்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.