1-mdl.jpg)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி முன்னதாக கடந்தாண்டு கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இதில் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஜோடி மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் கடந்த ஆண்டு விளையாடினர்.
இம்முறை கேஎல் ராகுல் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சுப்மான் கில் மாற்று வீரராக களமிறக்கப்படலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து லெஸ்டர்சைர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித், சுப்மான் கில் 20 ரன்களை தாண்டி ஆட்டமிழந்தனர்.
ஆனால், அந்த இன்னிங்சில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தார். 111 பந்துகளை எதிர்கொண்ட பரத், 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும. இதே போன்று ரிஷப் பந்தும் அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவித்தார்.