1-(1)-mdl.jpg)
ஆசியக் கோப்பைத் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட இந்த அணிக்கு காயத்தில் இருந்து கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் திரும்ப வந்திருக்கிறார்கள். கே எல் ராகுல் விக்கெட் கீப்பிங் வேலையை செய்வார் என்கின்ற காரணத்தினால், இஷான் கிஷானை இரண்டாவது விக்கெட் கீப்பர் மற்றும் மூன்றாவது துவக்க மாற்று ஆட்டக்காரராக அணியில் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது.
அதே சமயத்தில் இந்த அணியில் பேக் அப் வீரராக மட்டுமே சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத இளம் 20 வயது திலக் வர்மா 17 பேர் கொண்ட முக்கிய அணியில் இடம் பெற்று இருக்கிறார். தற்பொழுது இதற்கான காரணத்தை இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “திலக் வர்மாவை அணியில் எடுத்தது அவர் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் காட்டிய செயல் திறனுக்காக மட்டுமே கிடையாது. அந்தத் தொடரில் அவர் வெளிப்படுத்திய மனோபாவத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவரை அணியுடன் அழைத்துச் செல்லவும், அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கவும் இது வழி செய்கிறது.