Advertisement

விராட் கோலி பார்த்து பல இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் - ராகுல் டிராவிட்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் சவாலான காரியம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 15, 2022 • 15:46 PM
“Look beyond those numbers,” Dravid opens up on dealing with Kohli’s rough patch as coach
“Look beyond those numbers,” Dravid opens up on dealing with Kohli’s rough patch as coach (Image Source: Twitter)
Advertisement

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. எஞ்சியுள்ள ஆறு போட்டிகளில் இந்திய அணி குறைந்தபட்சம் 5 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் டிராவிட் , டெஸ்ட் போட்டி குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "வங்கதேசம் போன்ற நாடுகளில் டெஸ்ட் போட்டி விளையாடுவது மூலம் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று கூறினார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது குறித்து விளக்கம் அளித்துள்ள டிராவிட், நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவில்லை. முதலில் சட்டோகிராம் டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெல்ல வேண்டும்.

Trending


அதன் பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படி விளையாடுகிறோம் என்று பார்க்க வேண்டும். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளும் கடும் சவாலாக இருக்கும். இதில் வெற்றி பெற்றால் தான் இறுதி சுற்றுக்கு செல்ல முடியும். எனவே ஒவ்வொரு போட்டியாக தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வருவது நல்ல விஷயம் தான்.

ஆனால் இந்தியா உட்பட அனைத்து அணிகளுமே தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் விதம் மாறி உள்ளது. முன்பு எல்லாம் அதிக டிரா நிகழும். இப்போது அனைத்து அணிகளுமே வெற்றிக்காக தான் விளையாடுகிறார்கள். டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை எந்த அணி சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கிறார்களோ? ஒரு டெஸ்ட் போட்டிக்கும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கும் உள்ள நேரத்தில் எப்படி தங்களை தயார் படுத்துகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.

விராட் கோலி ரன்கள் குவிக்க வேண்டும் என வெறியுடன் இருக்கிறார். அவர் பார்முக்கு திரும்பி வந்து விட்டார். வங்கதேசத்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த சதம் நிச்சயம் இந்திய அணிக்கு நல்ல விஷயமாகும். விராட் கோலி பயிற்சியின் போது கடின உழைப்பை மேற்கொண்டு வருகிறார். விராட் கோலியின் சாதனைகளே அவரைப் பற்றி சொல்லும் அவருடைய ரெக்கார்டுகள் எல்லாம் பிரமிக்கும் வகையில் இருக்கும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு விராட் கோலி ஒரு நல்ல உதாரணம் இன்னிங்ஸின் போது எப்படி பொறுமை காக்க வேண்டும். எப்போது அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நுட்பம் அவருக்கு நன்றாக தெரியும். விராட் கோலி பார்த்து பல இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement