
இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் டி20 லீக் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா - ஜாஃபனா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற தம்புலா ஆரா அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது.
அதன்பின் 73 ரன்கள் சேர்த்திருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆட்டமிழக்க, 54 ரன்களோடு ஃபெர்னாண்டோவும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 10 ரன்களிலும், சமரவிக்ரமா 38 ரன்களோடும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.