
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. முன்னதாக இத்தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணியில் ஆல் ரவுண்டராக இடம்பிடித்திருந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
இதன்மூலம் அவர் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் விளையாடபோவதில்லை என்பதையும் உறுதிசெய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவது ஒரு அற்புதமான பயணமாக இருந்து வருகிறது, மேலும் நான் எனது அணிக்காக விளையாடிய ஒவ்வொரு தருணத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது நாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவது நான் எப்போதும் போற்றும் ஒன்று.