
ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 5ஆம் தொடங்கி விறுவிறுப்பாக நடபெற்று வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 6 போட்டிகளில் 4இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் வருகிற நவம்பர் 4ஆம் தேதி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல் கடந்த திங்கள்கிழமை கோல்ஃப் வண்டியின் பின்புறத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
இதனால் அவருக்கு மூளையதிர்ச்சி மற்றும் முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் விலகினார். 35 வயதான மேக்ஸ்வெல், நெதர்லாந்து அணிக்கு எதிராக 40 பந்துகளில் சதம் விளாசி உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.